(ப-பொ.) இரந்து உயிர்வாழ்தலின்மேல் கீழ்மை இல்லை. (ப-ரை.) இரத்தலின் - பிச்சையெடுத்து உயிர் வாழ்வதைக் காட்டிலும், ஊங்கு - மேலான, இளிவரவு - இழிவு, இல்லை -வேறில்லை. 'ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற் கிரவின் இளிவந்த தில்' - திருக்குறள். 'இரத்த லின்னூங் கிளிவர வில்லை' : 'இரத்திலினூங்காம் - பாடபேதம்.
|