தொடக்கம் | ||
இன்னா நாற்பது பாடல் தொகுப்பு 6 முதல் 10 வரை
|
||
6. | அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா; மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா; இடும்பை உடையார் கொடை இன்னா; இன்னா, கொடும்பாடு உடையார் வாய்ச் சொல். |
உரை |
7. | ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா; நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா; தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா, மாற்றம் அறியான் உரை. |
உரை |
8. | பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா; நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா; இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா, நயம் இல் மனத்தவர் நட்பு. |
உரை |
9. | கள் இல்லா மூதூர் களிகட்கு நற்கு இன்னா; வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா; வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா, பண் இல் புரவிப் பரிப்பு. |
உரை |
10. | பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா; இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா; அருள் இல்லார் தம் கண் செலவு இன்னா; இன்னா, பொருள் இல்லார் வண்மை புரிவு. |
உரை |