தொடக்கம் | ||
இன்னா நாற்பது பாடல் தொகுப்பு 16 முதல் 20 வரை
|
||
16. | உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா; நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனி இன்னா; கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா, எண் இலான் செய்யும் கணக்கு. |
உரை |
17. | ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா; மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா; நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா, ஈன்றாளை ஓம்பா விடல். |
உரை |
18. | உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா; மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா; சுரம் அரிய கானம் செலவு இன்னா; இன்னா, மன வறியாளர் தொடர்பு. |
உரை |
19. | குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா; நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா; நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா, கலத்தல் குலம் இல் வழி. |
உரை |
20. | மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா; ஈரம் இலாளர் கடு மொழிக் கூற்று இன்னா; மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா; ஆங்கு இன்னா, மூரி எருத்தால் உழவு. |
உரை |