தொடக்கம் | ||
இன்னா நாற்பது பாடல் தொகுப்பு 21 முதல் 25 வரை
|
||
21. | ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா; பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா; மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா, ஓத்து இலாப் பார்ப்பான் உரை. |
உரை |
22. | யானை இல் மன்னரைக் காண்டல் நனி இன்னா; ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா; தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா, கான் யாறு இடையிட்ட ஊர். |
உரை |
23. | சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா; துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா; அறை பறை அன்னர் சொல் இன்னா; இன்னா, நிறை இலான் கொண்ட தவம். |
உரை |
24. | ஏமம் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா; தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா; காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா, யாம் என்பவரோடு நட்பு. |
உரை |
25. | நட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா; ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா; கட்டு இலா மூதூர் உறைவு இன்னா; ஆங்கு இன்னா, நட்ட கவற்றினால் சூது. |
உரை |