தொடக்கம் | ||
இன்னா நாற்பது பாடல் தொகுப்பு 31 முதல் 35 வரை
|
||
31. | பண் அமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிது இன்னா; எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா; மண் இல் முழவின் ஒலி இன்னா; ஆங்கு இன்னா, தன்மை இலாளர் பகை. |
உரை |
32. | தன்னைத் தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா; முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா; தன்மை இலாளர் தொடர்பு இன்னா; ஆங்கு இன்னா, தொன்மை உடையார் கெடல். |
உரை |
33. | கள் உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா; முள்ளுடைக் காட்டில் நடத்தல் நனி இன்னா; வெள்ளம் படு மாக் கொலை இன்னா; ஆங்கு இன்னா, கள்ள மனத்தார் தொடர்பு. |
உரை |
34. | ஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா; விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா; இழித்த தொழிலவர் நட்பு இன்னா; இன்னா, கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு. |
உரை |
35. | எழிலி உறை நீங்கின், ஈண்டையார்க்கு இன்னா; குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா; குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா, அழகுடையான் பேதை எனல். |
உரை |