தொடக்கம் | ||
இன்னா நாற்பது பாடல் தொகுப்பு 36 முதல் 40 வரை
|
||
36. | பொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா; நெடு மாட நீள் நகர்க் கைத்து இன்மை இன்னா; அடு மனை பார்த்திருந்து ஊண் இன்னா; இன்னா, கெடும் இடம் கைவிடுவார் நட்பு. |
உரை |
37. | நறிய மலர் பெரிதும் நாறாமை இன்னா; துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா; அறியான் வினாப்படுதல் இன்னா; ஆங்கு இன்னா, சிறியார்மேல் செற்றம் கொளல். |
உரை |
38. | பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா; மறம் இலா மன்னர் செருப் புகுதல் இன்னா; வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா; இன்னா, திறன் இலான் செய்யும் வினை. |
உரை |
39. | கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா; கடித்து அமைந்த பாக்கினுள் கல் படுதல் இன்னா; கொடுத்து விடாமை கவிக்கு இன்னா; இன்னா, மடுத்துழிப் பாடா விடல். |
உரை |
40. | அடக்கம் உடையவன் மீளிமை இன்னா; தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா; அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா, அடக்க, அடங்காதார் சொல். |
உரை |