"மருவிய காதல் மனையாளுந் தானும் இருவரும் பூண்டுய்ப்பி னல்லான் - ஒருவரான் இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடஞ் செல்லாது தெற்றிற்று நின்று " என அறநெறிச்சாரமும் கூறுதல் காண்க. மனைவாழ்க்கை ஏனைய துறவற வாழ்க்கையைக் காட்டிலும்இனிதாதலை, "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று" (குறள்- 46) எனத் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் கூறினார். துறத்தல் (புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய உடம்பின்கண்ணும் உளதாய பற்றினை அவற்றது நிலையாமை நோக்கி) விடுதல் நெடியார் - (செல்லற்குக் காலம்) நீட்டியாதவராய் ; இதுமுற்றெச்சம் இஃது இப்பொருட்டாதலை, "இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றஞ் செல்வம் வலியென்று இவையெல்லாம் - மெல்ல நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் தலையாயார் தாமுய்யக் கொண்டு " என்னும் நாலடிச் செய்யுள் வலியுறுத்தும். ‘தலையாகத் துறத்தல் ' என முடித்து, ‘தலைப்பட்டார் தீரத்துறந்தார் என்பதற் கொப்பத் ‘(தாம்) தலைப்படுமாறு துறத்தல் ' எனப் பொருளுரைப்பாரு முளர். 3. ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே தேரிற்கோள் நட்புத் திசைக்கு. (ப-ரை.) ஏவது மாறா - ஏவலை மறாது செய்யும், இளங்கிளைமை - மக்களுடைமை, முன்இனிது - முற்பட வினிது ; நவை போகான் - குற்றங்களிற் செல்லாதவனாய், நாளும் கற்றல் - நாடோறுங் கற்றல், மிக இனிது -; ஏர் உடையான் - (தனதென) உழுமாடுகளையுடையானது, வேளாண்மை - பயிர்த்தொழில், இனிது -; ஆங்கு - அதுபோல , தேரின் - ஆராயின், திசைக்கு - (தான் செல்லுந் திசையில், கோன் நட்பு - நட்புக்கொள்ளுதல், இனிது -
|