களவழி நாற்பது பாடல் தொகுப்பு 16 முதல் 20 வரை
 
16. பரும இன மாக் கடவி, தெரி மறவர்
ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்
வேங்கை இரும் புலி போன்ற-புனல் நாடன்
வேந்தரை அட்ட களத்து.
உரை
   
17. ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி,
தாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி
கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே-
போர்க் கொடித் தானை, பொரு புனல், நீர் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து.
உரை
   
18. நளிந்த கடலுள் திமில் திரைபோல், எங்கும்
விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும்-தெளிந்து
தடற்று இலங்கு ஒள் வாள், தளை அவிழ் தார், சேஎய்
உடற்றியார் அட்ட களத்து.
உரை
   
19. இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி,
கடைமணி காண்வரத் தோன்றி, நடை மெலிந்து,
முக்கோட்ட போன்ற, களிறு எல்லாம்-நீர் நாடன்
புக்கு அமர் அட்ட களத்து.
உரை
   
20. இரு சிறகர் ஈர்க்கும் பரப்பி, எருவை
குருதி பிணம் கவரும் தோற்றம், அதிர்வு இலாச்
சீர் முழாப் பண் அமைப்பான் போன்ற-புனல் நாடன்
நேராரை அட்ட களத்து.
உரை