களவழி நாற்பது பாடல் தொகுப்பு 21 முதல் 25 வரை
 
21. இணை வேல் எழில் மார்வத்து இங்க, புண் கூர்ந்து,
கணை அலைக்கு ஒல்கிய யானை, துணை இலவாய்,
தொல் வலியின் தீர, துளங்கினவாய், மெல்ல
நிலம் கால் கவவு மலை போன்ற-செங் கண்
சின மால் பொருத களத்து.
உரை
   
22. இரு நிலம் சேர்ந்த குடைக் கீழ், வரி நுதல்
ஆடு இயல் யானைத் தடக் கை ஒளிறு வாள்
ஓடா மறவர் துணிப்ப, துணிந்தவை
கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே-
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன்
கூடாரை அட்ட களத்து.
உரை
   
23. எற்றி வயவர் எறிய, நுதல் பிளந்து
நெய்த்தோர்ப் புனலுள் நிவந்த களிற்று உடம்பு,
செக்கர் கொள் வானில் கருங் கொண்மூப் போன்றனவே-
கொற்ற வேல் தானை, கொடித் திண் தேர், செம்பியன்
செற்றாரை அட்ட களத்து.
உரை
   
24. திண் தோள் மறவர் எறிய, திசைதோறும்
பைந் தலை பாறிப் புரள்பவை, நன்கு எனைத்தும்
பெண்ணை அம் தோட்டம் பெரு வளி புக்கற்றே-
கண் ஆர் கமழ் தெரியல், காவிரி, நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.
உரை
   
25. மலை கலங்கப் பாயும் மலைபோல் நிலை கொள்ளாக்
குஞ்சரம் பாய, கொடி எழுந்து, பொங்குபு
வானம் துடைப்பன போன்ற-புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.
உரை