தொடக்கம் | ||
களவழி நாற்பது பாடல் தொகுப்பு 26 முதல் 30 வரை
|
||
26. | எவ் வாயும் ஓடி, வயவர் துணித்திட்ட கை வாயில் கொண்டு, எழுந்த செஞ் செவிப் புன் சேவல் ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும் செவ் வாய் உவணத்தின் தோன்றும்-புனல் நாடன் தெவ்வரை அட்ட களத்து. |
உரை |
27. | செஞ் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால், ஒண் செங் குருதி தொகுபு ஈண்டி நின்றவை, பூ நீர் வியல் மிடாப் போன்ற-புனல் நாடன் மேவாரை அட்ட களத்து. |
உரை |
28. | ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி, பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள், கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி, இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக் கண்ணாடி காண்பாரின் தோன்றும்-புனல் நாடன் நண்ணாரை அட்ட களத்து. |
உரை |
29. | கடி காவில் காற்று உற்று எறிய, வெடி பட்டு, வீற்று வீற்று ஓடும் மயில் இனம்போல், நால் திசையும் கேளிர் இழந்தார் அலமருப-செங் கண் சின மால் பொருத களத்து. |
உரை |
30. | மடங்க எறிந்து மலை உருட்டும் நீர்போல், தடங் கொண்ட ஒண் குருதி கொல் களிறு ஈர்க்கும்- மடங்கா மற மொய்ம்பின், செங் கண், சின மால் அடங்காரை அட்ட களத்து. |
உரை |