தொடக்கம் | ||
களவழி நாற்பது பாடல் தொகுப்பு 31 முதல் 35 வரை
|
||
31. | ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை மின்னுக் கொடியின் மிளிரும்-புனல் நாடன் ஒன்னாரை அட்ட களத்து. |
உரை |
32. | மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள் செய்யது போர்த்தாள்போல் செவ்வந்தாள்-பொய் தீர்ந்த பூந் தார், முரசின், பொரு புனல், நீர் நாடன் காய்ந்தாரை அட்ட களத்து. |
உரை |
33. | பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம், நெய்தல் இடை இடை வாளை பிறழ்வனபோல் ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே- கொய் சுவல் மாவின், கொடித் திண் தேர், செம்பியன் தெவ்வரை அட்ட களத்து. |
உரை |
34. | இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர் சுடர் இலங்கு எஃகம் எறிய, சோர்ந்து உக்க குடர் கொடு வாங்கும் குறு நரி, கந்தில் தொடரொடு கோள் நாய் புரையும்-அடர் பைம் பூண் சேய் பொருது அட்ட களத்து. |
உரை |
35. | செவ் வரைச் சென்னி அரிமானோடு அவ் வரை ஒல்கி உருமிற்கு உடைந்தற்றால்-மல்கிக் கரை கொன்று இழிதரும் காவிரி நாடன் உரை சால் உடம்பிடி மூழ்க, அரசோடு அரசு உவா வீழ்ந்த களத்து. |
உரை |