களவழி நாற்பது பாடல் தொகுப்பு 36 முதல் 41 வரை
 
36. ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே,-
காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள்,
மா உதைப்ப, மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய்,
ஆ உதை காளாம்பி போன்ற,-புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.
உரை
   
37. அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு
முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும்
பௌவம் புணர் அம்பி போன்ற-புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.
உரை
   
38. பருமப் பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து
உரும் எறி பாம்பின் புரளும்-செரு மொய்ம்பின்,
பொன் ஆர மார்பின், புனை கழற் கால், செம்பியன்
துன்னாரை அட்ட களத்து.
உரை
   
39. மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்,
புய்ந்து கால் போகிப் புலால் முகந்த வெண்குடை
பஞ்சி பெய் தாலமே போன்ற-புனல் நாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து.
உரை
   
40. வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உழுவனபோல்,
எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த-பல் வேல்,
பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால்
கணை மாரி பெய்த களத்து.
உரை
   
41. வேல் நிறத்து இங்க, வயவரால் ஏறுண்டு
கால் நிலை கொள்ளாக் கலங்கி, செவி சாய்த்து,
மா, நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே-
பாடு ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன்
கூடாரை அட்ட களத்து.
உரை