தொடக்கம் | ||
களவழி நாற்பது பாடல் தொகுப்பு 6 முதல் 10 வரை
|
||
6. | நால் நால்-திசையும் பிணம் பிறங்க, யானை அடுக்குபு பெற்றிக் கிடந்த-இடித்து உரறி, அம் கண் விசும்பின் உரும் எறிந்து, எங்கும் பெரு மலை தூவ எறிந்தற்றே; அரு மணிப் பூண் ஏந்து எழில் மார்பின், இயல் திண் தேர், செம்பியன் வேந்தரை அட்ட களத்து. |
உரை |
7. | அஞ்சனக் குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி, இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே-செங்கண் வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் பொருநரை அட்ட களத்து. |
உரை |
8. | யானைமேல் யானை நெரிதர, ஆனாது கண் நேர் கடுங் கணை மெய்ம் மாய்ப்ப, எவ்வாயும் எண்ண அருங் குன்றில் குரீஇஇனம் போன்றவே- பண் ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன் நண்ணாரை அட்ட களத்து. |
உரை |
9. | மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட கால் ஆசோடு அற்ற கழற் கால், இருங்கடலுள் நீலச் சுறாப் பிறழ்வ போன்ற-புனல் நாடன் நேராரை அட்ட களத்து. |
உரை |
10. | பல் கணை எவ் வாயும் பாய்தலின், செல்கலாது ஒல்கி, உயங்கும் களிறு எல்லாம், தொல் சிறப்பின் செவ்வல் அம் குன்றம்போல் தோன்றும்-புனல் நாடன் தெவ்வரை அட்ட களத்து. |
உரை |