தொடக்கம் | ||
களவழி நாற்பது பாடல் தொகுப்பு 11 முதல் 15 வரை
|
||
11. | கழுமிய ஞாட்பினுள் மைந்து இழந்தார் இட்ட ஒழி முரசம் ஒண் குருதி ஆடி, தொழில் மடிந்து, கண் காணா யானை உதைப்ப, இழுமென மங்குல் மழையின் அதிரும்-அதிராப் போர்ச் செங் கண் மால் அட்ட களத்து. |
உரை |
12. | ஓவாக் கணை பாய ஒல்கி, எழில் வேழம் தீவாய்க் குருதி இழிதலால், செந் தலைப் பூவல் அம் குன்றம் புயற்கு ஏற்ற போன்றனவே- காவிரி நாடன் கடாஅய், கடிது ஆகக் கூடாரை அட்ட களத்து. |
உரை |
13. | நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி, வயவர் வரை புரை யானக் கை நூற, வரை மேல் உரும் எறி பாம்பின் புரளும்-செரு மொய்ம்பின் சேய் பொருது அட்ட களத்து. |
உரை |
14. | கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க, பவளம் சொரிதரு பை போல், திவள் ஒளிய ஒண் செங் குருதி உமிழும்-புனல் நாடன் கொங்கரை அட்ட களத்து. |
உரை |
15. | கொல் யானை பாய, குடை முருக்கி, எவ்வாயும் புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க, தச்சன் வினை படு பள்ளியின் தோன்றுமே-செங் கண் சின மால் பொருத களத்து. |
உரை |