தொடக்கம் | ||
கார் நாற்பது பாடல் தொகுப்பு 6 முதல் 10 வரை
|
||
6. | தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி, வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்! வருந்தல்;- கடிது இடி வானம் உரறும், நெடு இடைச் சென்றாரை, ‘நீடன்மின்’ என்று. |
உரை |
7. | நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும், தற் செய்வான் சென்றார்த் தரூஉம்,-தளரியலாய்!- பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல எச் சாரும் மின்னும் மழை. |
உரை |
8. | மண் இயல் ஞாலத்து, மன்னும் புகழ் வேண்டி, பெண் இயல் நல்லாய்! பிரிந்தார் வரல் கூறும்- கண் இயல் அஞ்சனம் தோய்ந்தபோல், காயாவும் நுண் அரும்பு ஊழ்த்த புறவு. |
உரை |
9. | கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று; எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும், இன் சொல் பலவும் உரைத்து. |
உரை |
10. | வான் ஏறு வானத்து உரற, வய முரண் ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்ப, கான் யாற்று ஒலியின் கடு மான் தேர்-என் தோழி!- மேனி தளிர்ப்ப, வரும். |
உரை |