தொடக்கம் | ||
கார் நாற்பது பாடல் தொகுப்பு 11 முதல் 15 வரை
|
||
11. | புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார், வணர் ஒலி ஐம்பாலாய்! வல் வருதல் கூறும்- அணர்த்து எழு பாம்பின் தலைபோல் புணர் கோடல் பூங் குலை ஈன்ற புறவு. |
உரை |
12. | மை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்! ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்;- நெய் அணி குஞ்சரம் போல, இருங் கொண்மூ வைகலும் ஏரும், வலம். |
உரை |
13. | ஏந்து எழில் அல்குலாய்! ஏமார்ந்த காதலர் கூந்தல் வனப்பின் பெயல் தாழ, வேந்தர் களிறு எறி வாள் அரவம் போலக் கண் வௌவி, ஒளிறுபு மின்னும், மழை. |
உரை |
14. | செல்வம் தரல் வேண்டிச் சென்ற நம் காதலர் வல்லே வருதல் தெளிந்தாம்;-வயங்கிழாய்!- முல்லை இலங்கு எயிறு ஈன, நறுந் தண் கார் மெல்ல இனிய நகும். |
உரை |
15. | திருந்திழாய்! காதலர் தீர்குவர் அல்லர்- குருந்தின் குவி இணர் உள் உறை ஆகத் திருந்து இன் இளி வண்டு பாட, இருந் தும்பி இன் குழல் ஊதும் பொழுது. |
உரை |