தொடக்கம் | ||
கார் நாற்பது பாடல் தொகுப்பு 16 முதல் 20 வரை
|
||
16. | கருங் குயில் கையற, மா மயில் ஆல, பெருங் கலி வானம் உரறும்-பெருந்தோள்! செயலை இளந் தளிர் அன்ன நின் மேனிப் பயலை பழங்கண் கொள. |
உரை |
17. | அறைக் கல் இறு வரைமேல் பாம்பு சவட்டி, பறைக் குரல் ஏறொடு பௌவம் பருகி, உறைத்து இருள் கூர்ந்தன்று, வானம்; பிறைத் தகை கொண்டன்று,-பேதை!-நுதல். |
உரை |
18. | கல் பயில் கானம் கடந்தார் வர, ஆங்கே நல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப, செல்வர் மனம்போல் கவின் ஈன்ற,-நல்கூர்ந்தார் மேனிபோல் புல்லென்ற காடு. |
உரை |
19. | செங் கால் மராஅம் தகைந்தன; பைங் கோல் தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி, நெடு இடைச் சென்றது, என் நெஞ்சு. |
உரை |
20. | வீறு சால் வேந்தன் வினையும் முடிந்தன; ஆறும் பதம் இனிய ஆயின; ஏறொடு அரு மணி நாகம் அனுங்க, செரு மன்னர் சேனைபோல் செல்லும், மழை. |
உரை |