தொடக்கம் | ||
கார் நாற்பது பாடல் தொகுப்பு 31 முதல் 35 வரை
|
||
31. | எருமை எழில் ஏறு, எறி பவர் சூடி, செரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி, திருநுதற்கு யாம் செய் குறி. |
உரை |
32. | கடாஅவுக, பாக! தேர் கார் ஓடக் கண்டே; கெடாஅப் புகழ் வேட்கைச் செல்வர் மனம்போல் படாஅ மகிழ் வண்டு பாண் முரலும், கானம் பிடாஅப் பெருந்தகை நற்கு. |
உரை |
33. | ‘கடல் நீர் முகந்த கமஞ் சூல் எழிலி குடமலை ஆகத்து, கொள் அப்பு இறைக்கும் இடம்’ என ஆங்கே குறி செய்தேம், பேதை மடமொழி எவ்வம் கெட. |
உரை |
34. | தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது பெரு விறல் வானம் பெரு வரை சேரும் கரு அணி காலம் குறித்தார், திரு அணிந்த ஒள் நுதல் மாதர் திறத்து. |
உரை |
35. | ‘சென்ற நம் காதலர் சேண் இகந்தார்!’ என்று எண்ணி ஒன்றிய நோயோடு இடும்பை பல கூர, வென்றி முரசின் இரங்கி, எழில் வானம் நின்றும் இரங்கும், இவட்கு. |
உரை |