நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க
படு பனை அன்னர், பலர் நச்ச வாழ்வார்;
குடி கொழுத்தக்கண்ணும், கொடுத்து உண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.