அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்
நிழல் மரம்போல் நேர் ஒப்பத் தாங்கி, பழு மரம்போல்
பல்லார் பயன் துய்ப்ப, தான் வருந்தி வாழ்வதே-
நல் ஆண்மகற்குக் கடன்.