நுண் உணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை
பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்;-எண்ணுங்கால்,
பெண் அவாய், ஆண் இழந்த பேடி அணியாளோ,
கண் அவாத் தக்க கலம்?