'மன்றம் கறங்க மணப் பறை ஆயின,
அன்று அவர்க்கு ஆங்கே, பிணப் பறை ஆய், பின்றை
ஒலித்தலும் உண்டாம்' என்று, உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம்-மாண்டார் மனம்.