'படு மழை மொக்குளின் பல் காலும் தோன்றி,
கெடும், இது ஓர் யாக்கை' என்று எண்ணி, 'தடுமாற்றம்
தீர்ப்பேம் யாம்' என்று உணரும் திண் அறிவாளரை
நேர்ப்பார் யார், நீள் நிலத்தின்மேல்?