கரவாத திண் அன்பின் கண் அன்னார்கண்ணும்
இரவாது வாழ்வது ஆம் வாழ்க்கை; இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால்; என்கொலோ,
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு?