பாட்டு முதல் குறிப்பு
வினை முற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது
நாஞ்சில் வலவன் நிறம் போலப் பூஞ் சினைச்
செங் கால் மராஅம் தகைந்தன; பைங் கோல்
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி,
நெடு இடைச் சென்றது, என் நெஞ்சு.
உரை