பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே
சிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல்,
செல்வ மழைத் தடங் கண், சில் மொழி, பேதை வாய்
முள் எயிறு ஏய்ப்ப, வடிந்து.