பாட்டு முதல் குறிப்பு
தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-
தூதொடு வந்த, மழை.
உரை