பாட்டு முதல் குறிப்பு
ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூற வற்புறுத்தது
முருகியம்போல் வானம் முழங்கி இரங்க,
குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி,
‘உள்ளாது அகன்றார்’ என்று ஊடி யாம் பாராட்ட,
பள்ளியுள் பாயும், பசப்பு.
உரை