ஐந்திணை ஐம்பது
(மாறன் பொறையனார்)
1. முல்லை
தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது
1. மல்லர்க் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து,
செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி,-நல்லாய்!-
இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப, ஈதோ
மயங்கி வலன் ஏரும், கார்!