சிறைப்புறத்தானாகத் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத்
தலைமகள் இயற்பட மொழிந்தது
13. ‘கானக நாடன் கலவான் என் தோள்!’ என்று,-
மான் அமர் கண்ணாய்!-மயங்கல் நீ! நானம்
கலந்து இழியும் நல் மலைமேல் வால் அருவி ஆட,
புலம்பும் அகன்று நில்லா!