பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக தோழி, தாய் கேட்டதற்கு மறு மாற்றம் சொல்லுவாள் போலப்
படைத்து மொழி கிளவியான்வரைவு கடாயது
15. வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து,
மாந் தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும்
பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச்
சேந்தனவாம், சேயரிக் கண்தாம்.