இரவுக்குறி வந்து பெயரும் தலைமகனைக் கண்ணுற்று
நின்ற தோழி வரைவு கடாயது
16. கொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு,-
மடி செவி வேழம்-இரீஇ, அடி ஓசை
அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்
துஞ்சா, சுடர்த்தொடி கண்.