தோழி இரவுக்குறியின்கண் நெறி விலக்கி, வரைவு கடாயது
19. நெடு மலை நல் நாட! நீள் வேல் துணையா,
கடு விசை வால் அருவி நீந்தி, நடு இருள்,
இன்னா அதர் வர, ‘ஈர்ங் கோதை மாதராள்
என்னாவாள்!’ என்னும், என் நெஞ்சு.