பாட்டு முதல் குறிப்பு
தலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்று வெறி விலக்கவேண்டும்
உள்ளத்தாளாய்ச் சொல்லியது
20.
வெறி கமழ் வெற்பன் என் மெய்ந் நீர்மை கொண்டது
அறியாள், மற்று அன்னோ! ‘அணங்கு அணங்கிற்று!’ என்று,
மறி ஈர்த்து உதிரம் தூய், வேலன்-தரீஇ,
வெறியோடு அலம்வரும், யாய்.
உரை