தலைமகன் பொருள்வயின் பிரிந்த காலத்து ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்குத்
தலைமகள், 'ஆற்றுவல்' என்பதுபட மொழிந்தது
35. கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த
தடி நிணம் மாந்திய பேஎய், நடுகல்
விரி நிழல், கண்படுக்கும் வெங் கானம் என்பர்,
பொருள் புரிந்தார் போய சுரம்.