|
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, படைத்து மொழி கிளவியால் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது | |
44. | கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழில் நோக்கி, உண்கண் சிவப்ப அழுதேன் ஒளி முகம் கண்டு, அன்னை, ‘எவ்வம் யாது?’ என்ன, ‘கடல் வந்து என் வண்டல் சிதைத்தது’ என்றேன். | |
|
உரை
|