திணைமொழி ஐம்பது
(கண்ணஞ் சேந்தனார்)
1. குறிஞ்சி
அஞ்சி அச்சுறுத்துவது
1. புகழ் மிகு சாந்து எறிந்து, புல் எரி ஊட்டி,
புகை கொடுக்கப் பெற்ற புலவோர் துகள் பொழியும்
வான் உயர் வெற்ப! இரவின் வரல் வேண்டா,
யானை உடைய சுரம்.