பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
13. ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர்
மராஅ மலர்ந்தன, தோன்றி; விராஅய்க்
கலந்தனர் சென்றார் வலந்த சொல் எல்லாம்-
பொலந்தொடீஇ!-பொய்த்த குயில்.