'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
19. கலையொடு மான் இரங்கு கல் அதர் அத்த
நிலை அஞ்சி, நீள் சுரத்து அல்குவர்கொல்?-தோழி!-
முலையொடு சோர்கின்ற, பொன் வண்ணம்; அன்னோ!
வளையொடு சோரும், என் தோள்.