வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது
39. கருங் கயத்து ஆங்கண் கழுமிய நீலம்
பெரும் புற வாளைப் பெடை கதூஉம் ஊரன்
விரும்பு நாள் போலான்; வியல் நலம் உண்டான்;
கரும்பின் கோது ஆயினேம் யாம்.