வினை முற்றி மீண்ட தலைமகன், தலைமகட்குத் தூது விடுகின்றான்,
தூதிற்குச் சொல்லியது
115. படும் தடங் கண் பல் பணைபோல் வான் முழங்கல் மேலும்,
கொடுந் தடங் கண் கூற்று மின் ஆக, நெடுந் தடங் கண்
நீர் நின்ற நோக்கின்நெடும் பணை மென் தோளாட்கு,
‘தேர் நின்றது’ என்னாய், திரிந்து.