பருவம் கண்டு, ஆற்றாளாய தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி
தான் ஆற்றாளாய்ச் சொல்லியது
116. குருந்தே! கொடி முல்லாய்! கொன்றாய்! தளவே!
முருந்து ஏய் எயிறொடு தார் பூப்பித்திருந்தே,
அரும்பு ஈர் முலையாள் அணி குழல் தாழ் வேய்த்தோள்
பெரும் பீர் பசப்பித்தீர், பேர்ந்து.