பாட்டு முதல் குறிப்பு
'இரவும் பகலும் வாரல்' என்று தலைமகனைத் தோழி வரைவு கடாயது
35.
புலால் அகற்றும் பூம் புன்னைப் பொங்கு நீர்ச் சேர்ப்ப!
நிலா அகற்றும் வெண் மணல் தண் கானல், சுலா அகற்றி,
கங்குல் நீ வாரல்; பகல் வரின், மாக் கவ்வை ஆம்,
மங்குல் நீர் வெண் திரையின்மாட்டு.
உரை