தோழி வரைவு கடாயது
36. ‘முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு’ என்றே
குருகு வாய்ப் பெய்து, இரை கொள்ளாது, உருகி மிக
இன்னா வெயில் சிறகால் மறைக்கும் சேர்ப்ப! நீ
மன்னா வரவு மற!