பாங்கன் தலைமகனைக் கண்டு, தலைமகளை வியந்து சொல்லியது
47. பண்ணாது, பண்மேல் தேன் பாடும் கழிக் கானல்,
எண்ணாது கண்டார்க்கே ஏர் அணங்கால்; எண்ணாது
சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளைக்
காவார், கயிறுரீஇ விட்டார்.