தலைமகற்குத் தோழி குறை நேர்ந்து, பகற்குறியிடம்
அறியச் சொல்லியது
51. கடும் புலால் வெண் மணல் கானல் உறு மீன்கண்
படும் புலால் பார்த்தும்; பகர்தும்; அடும்பு எலாம்-
சாலிகைபோல் வலை சாலப் பல உணங்கும்;-
பாலிகை பூக்கும் பயின்று.