தலைமகளை ஒருநாள் கோலம் செய்து, அடியிற் கொண்டு முடிகாறும்
நோக்கி, 'இவட்குத் தக்கான் யாவனாவன் கொல்லோ?' என்று
ஆராய்ந்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது
62. வில்லார் விழவினும், வேல் ஆழி சூழ் உலகில்
நல்லார் விழவகத்தும், நாம் காணேம்;-நல்லாய்!-
உவர்க்கத்து ஒரோ உதவிச் சேர்ப்பன் ஒப்பாரைச்
சுவர்க்கத்து உளராயின், சூழ்.