பாட்டு முதல் குறிப்பு
பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லித்
தலைமகன் செலவு அழுங்கியது
76.
நெஞ்சம்! நினைப்பினும், நெல் பொரியும் நீள் அத்தம்,
‘அஞ்சல்!’ என ஆற்றின், அஞ்சிற்றால்; அஞ்சி,
புடை நெடுங் காது உறப் போழ்ந்து அகன்று நீண்ட
படை நெடுங் கண் கொண்ட, பனி.
உரை