வினை முற்றிய தலைமகன் தலைமகளை நினைந்த இடத்து, தலைமகள்
வடிவு தன் முன் நின்றாற் போல வந்து தோன்ற, அவ் வடிவை
நோக்கிச் சொல்லி, ஆற்றுவிக்கின்றது
77. வந்தால்தான், செல்லாமோ-ஆர் இடையாய்!-வார் கதிரால்,
வெந்தால்போல் தோன்றும் நீள் வேய் அத்தம், தந்து ஆர்
தகரக் குழல் புரள, தாழ் துகில் கை ஏந்தி,
மகரக் குழை மறித்த நோக்கு?