பருவம் காட்டி, தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
79. சென்றார் வருதல், செறிதொடி! சேய்த்துஅன்றால்;
நின்றார் சொல் தேறாதாய், நீடு இன்றி, வென்றார்
எடுத்த கொடியின் இலங்கு அருவி தோன்றும்
கடுத்த மலை நாடு காண்!